Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை தீவு திடலில், பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மற்றும் நடுத்தர வயது கொண்ட பெண்கள் என 5 ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் சியாமளா தேவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.